நெய் எனும் அமிர்தம்
சைவ மற்றும் அசைவ உணவு உண்ணும் இரண்டு வகை மனிதர்களுக்கும் பிடித்தமானது நெய். தென்னிந்தியாவில் நெய் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். நெய்யின் வரலாறு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையுடையது. நமது கலாச்சார உணவுகளிலும், இனிப்பு வகைகளிலும் நெய் இரண்டறக் கலந்துள்ளது. தவிர்க்க முடியாதது. அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெய்யால் செய்த உணவுகளையும், பாரம்பரிய இனிப்பு வகைகளையும் விரும்பி உண்கின்றனர். இந்தியாவில் நெய்யின் பயன்பாடு அதிகம்.
நெய்யில் நமது உடலுக்கு தேவையான மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளது.நெய் நரம்புகளை, எலும்புகளை வலிமையாக்கும். தொடர்ச்சியாய் நெய் உபயோகிப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்திற்கும், உடல் பருமனை சீர்படுத்துவதற்கும் நல்லது. நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பதால், உடலில் இருக்கும் தேவை இல்லாத கொழுப்புகளை கரைத்து, கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. நெய்யில் புரதச் சத்து அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலுக்கு கொடுக்கின்றது. தென்னிந்தியாவில் குழந்தைகளுக்கு பருப்பு சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட கொடுப்பது எல்லார் வீட்டிலும் அன்றாடம் நாம் பார்க்கும் ஒரு காட்சியாகும். மணம் வீசும் நெய்யால் செய்த இனிப்புகளும், பலகாரங்களும், அதன் அலாதி சுவையால் நம் நாவை அடிமையாக்கிவிடும்.
இன்று சுத்தமான நெய் கலந்து செய்யப்படும் சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு, சமீப காலமாக அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். தற்போது சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்கள் நெய் கலந்த சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இவ்வாறு பல வழிகளில் நெய் நமக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதால் அன்றாட வாழ்வில் அதை உபயோகித்து ஆரோக்கியத்தை மேம்பட செய்திடுவோம்.

No comments:
Post a Comment