Wednesday, 25 March 2020

ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் நிலக்கடலை


         இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் விரும்பி உண்ணும் இயற்கையின் கொடை நிலக்கடலை. பூமியில் நிலக்கடலையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளையுடையது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவராலும் விரும்பி உண்ணப்படுவது இது.

        இதன் உபயோகம் மற்றும் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம். நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பைத் தருகிறது. நிலக்கடலையில் உள்ள "பலிபீனால்" என்ற "ஆன்டிஆக்ஸிடென்ட் " அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நம் மிகவும் சத்தானவை என நினைக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை  விட இது அதிக சத்துமிக்க உணவுப்பொருளாகும். இதிலுள்ள சத்துக்கள் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. ஞாபக சக்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.




    உலகின் சத்தான உணவுப் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது நிலக்கடலை. அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப்   பொருட்களின் பட்டியலில் கடலை முக்கிய இடம் பிடித்துள்ளது. நமக்கு எளிதாகக் கிடைப்பதால் இதை அலட்சியம் செய்கின்றோம். நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்பது முற்றிலும் தவறானது. நமது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் கடலையில் உள்ளது.

         கடலையுடன் வெல்லம் மற்றும் கருப்பட்டி சேர்த்துச் செய்த பலகாரங்கள் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். தமிழகத்தில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலையில் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் இந்திய அளவில் புகழ் பெற்றவை.

   நிலக்கடலையில் நார்ச்சத்து, ப்ரோடீன், வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து, போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்துசத்துகளும் நிறைந்துள்ளது. இவ்வாறான மருத்துவ பயன்களையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் நிலக்கடலையை அன்றாட வாழ்வில் அனைவரும் சாப்பிட்டு நமது ஆரோக்யத்தைக் காப்போம்.

1 comment:

  1. Today's generation have to eat this health dish and get the benfit of it.

    ReplyDelete